அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
செம குஷியாக தாலிகட்ட ரெடியான மாப்பிளை.! சினிமாவையே மிஞ்சி திருமண மண்டபத்தையே அதிரவைத்த பெண்ணின் குரல்!!
செம குஷியாக தாலிகட்ட ரெடியான மாப்பிளை.! சினிமாவையே மிஞ்சி திருமண மண்டபத்தையே அதிரவைத்த பெண்ணின் குரல்!!
மதுரை மாவட்டம், வலையப்பட்டி என்ற பகுதியில் வசித்துவருபவர் முனியாண்டி. இவருக்கும் கட்டாரெட்டி பகுதியில் வசித்து வந்த பவித்ரா என்பவருக்கும் இருவீட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு நேற்று மாட்டுத்தாவணியின் அருகேயுள்ள மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெறவிருந்தது. இதனை தொடர்ந்து மாப்பிள்ளை, மணப்பெண், இருவீட்டார் மற்றும் உறவினர்கள் எல்லோரும் கூடியிருந்த நிலையில் மாப்பிளை தாலிகட்டும் நேரமும் வந்தது.
அப்போது, மண்டபத்திற்குள் திடீரென கைகுழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர் சினிமா பணியில் திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் மண்டபமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியிருந்த நிலையில், அனைவரும் அப்பெண்ணைப் பார்த்து ஏன் திருமணத்தை நிறுத்தினாய் என கேட்டுள்ளனர்.
அதற்கு அப்பெண் நான் ஈஸ்வரி. எனக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவருகிறேன். அதனை தொடர்ந்து மாப்பிள்ளையாக இருக்கும் முனியாண்டிக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் இப்போது, கர்ப்பமாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இதற்கு விரைந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அப்பொழுது முனியாண்டி ஈஸ்வரியுடன் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்ட நிலையில், மணப்பெண் வீட்டார் தங்களை ஏமாற்றிவிட்டனர். திருமணத்திற்கு செலவு செய்த தொகையைக் தருமாறு புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.