ஜோதிடரின் பேச்சைக் கேட்டு இளம் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த இரண்டு குடும்பங்கள்! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு இளம் சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த இரண்டு குடும்பங்கள்! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!



marriage-for-14-years-girl

சிவகங்கை மாவட்டம் , ஆவுடையார் கோயிலைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரின் மகன் 27 வயது நிரம்பிய ரத்னேஷ்வரன் என்பவருக்கும் இவரின் தாய் மாமன் மகள் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.

சிறுமிக்கு திருமணம் நடந்த தகவல் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததால் சிறுமிக்கு நடந்த திருமணம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஊர் நல அலுவலர் விஜயலட்சுமி காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் மணமகனின் பெற்றோர் மற்றும் மணமகளின் பெற்றோர் ஆகிய 4 பேர் மீது குழந்தைத் திருமணம் நடத்தி வைத்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மணமகன் ரத்னேஷ்வரனை  போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Child marriage

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப ஜோசியர் ஒருவர் 27 வயதில் ரத்னேஷ்வரனுக்கு திருமணம் நடத்தி வைத்தால் இருவரது வாழ்க்கையும் நலமாக இருக்கும் என கூறி அவர்களின் திருமணத்திற்கும் நாள் குறித்து கொடுத்துள்ளார்.

ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் வைத்து திருமணம் நடத்திய நிலையில் மற்றவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் மூன்றாம் மாதம் கழித்து நடந்த தாலி பெருக்கு நிகழ்ச்சி காரணமாக சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடந்த தகவல் பிறருக்கும்  தெரிய வந்துள்ளது. மேலும், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.