நாக்கை அறுத்து கடவுளுக்கு படைத்த இளைஞர்; காணிக்கை செலுத்தியாக கூறி அதிர்ச்சி தந்த சம்பவம்.!



Chhattisgarh Man Cut Tongue 


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டம், தனாடு தாலுகா, அஞ்சோறா காவல் நிலையத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வர் நிஷாத். இவர் சம்பவத்தன்று தனது கிராமத்தில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார்.

நாக்கை அறுத்து காணிக்கை:

அங்கு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டு இருந்த நபர், திடீரென தனக்குத்தானே நாக்கை அறுத்து குளக்கரையில் இருந்த கல்லில் வைத்து, தனது நாக்கை சாமிக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள், காவல் துறையினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.