செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஒளிப்பதிவாளர் யானை தாக்கி பலி.!



Kerala Palacode News Cameraman Died 

 

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் மாத்ருபூமி என்ற தனியார் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக ஏவி முகேஷ் என்ற 34 வயதுடைய நபர் பணியாற்றி வருகிறார். 

செய்தி சேகரிப்புப்பணியின்போது சோகம்:

இந்நிலையில், கடந்த புதன்கிழமை கொட்டேக்காடு பகுதியில் யானைகள் ஆற்றைக்கடக்கும் செய்தியை சேகரித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம் யானை ஒன்று அவரை தாக்கியது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சோகம்:

இதனால் படுகாயமடைந்த செய்தியாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.