யாருயா இவன்..! போலீசை திக்குமுக்காடவைத்த பலே திருடன்.! சினிமாவில்கூட இப்டி சீன் வைக்கலையே.!

யாருயா இவன்..! போலீசை திக்குமுக்காடவைத்த பலே திருடன்.! சினிமாவில்கூட இப்டி சீன் வைக்கலையே.!



man-theft-money-from-super-market

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவர் காந்தி பஜாரில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அவரது கடையை திறந்து பார்த்தபோது, கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜகோபால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார், சூப்பர் மார்க்கெட் கடைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சூப்பர் மார்க்கெட் கடை முழுவதும் கேமரா பொறுத்தப்பட்டுள்ளதால் திருடன் எப்படியும் சிக்கிவிடுவான் என்ற கோணத்தில் போலீசார் கடையில் இருந்த சிசி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். 

super market

சிசி.டி.வி., கேமராவை ஆய்வு செய்ததில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், நள்ளிரவு 1:00 மணியளவில் கடையின் மேல் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர், கேமராவில் இருந்து தப்பிக்க தலையில் பிளாஸ்டிக் டப்பாவை கவிழ்த்து கல்லாவில் இருந்த பணத்தைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. கைரேகை பிரிவு போலீசார் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.