பணத்தை எடுக்க முயற்சிக்கையில் சோகம்.. பதுங்கியிருந்த நல்லபாம்பு தீண்டியதில் கூலித்தொழிலாளி பலி..!

பணத்தை எடுக்க முயற்சிக்கையில் சோகம்.. பதுங்கியிருந்த நல்லபாம்பு தீண்டியதில் கூலித்தொழிலாளி பலி..!



man-dead-by-snake-bite

பணத்தை எடுக்க பெட்டிக்குள் கைவிட்ட போது, நல்லபாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள ஹாலோபிளாக் கம்பெனியில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்குள்ள பெட்டிக்குள் கைவிட்டு பணம் எடுத்த நிலையில், பெட்டிக்குள் இருந்த நல்ல பாம்பு நடராஜரின் வலது கையில் தீண்டியுள்ளது.

Thoothukudi

இதனால் அருகிலிருந்தவர்கள் உடனடியாக அந்த பாம்பை அடித்து, பாம்புடன் நடராஜனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதன்பின் திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.