காதலிக்க மறுத்த இளம்பெண்.! நள்ளிரவில் நண்பர்களுடன் வீடுபுகுந்து வாலிபர் செய்த காரியம்.!

காதலிக்க மறுத்த இளம்பெண்.! நள்ளிரவில் நண்பர்களுடன் வீடுபுகுந்து வாலிபர் செய்த காரியம்.!



man arrested for young girl kidnapped

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற வாலிபர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். ஆனால் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்வரன் அப்பெண்ணை காதலிப்பதாகக் கூறி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விக்னேஸ்வரனிடம் எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் விக்னேஷ்வரன் அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து இளம்பெண் தப்பிச்சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அப்பெண் வீட்டுக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக அப்பெண்ணை தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே இளம்பெண்ணை மீட்டனர். மேலும், இளம்பெண்ணை கடத்தி சென்ற விக்னேஷ்வரன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.