சொத்து தகராறு எதிரொலி... தாய், தந்தை உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு... காவல்துறை தீவிர விசாரணை.!

சொத்து தகராறு எதிரொலி... தாய், தந்தை உட்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு... காவல்துறை தீவிர விசாரணை.!



man-and-hs-wife-hacked-5-peoples-for-a-dispute-over-pro

தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகே உள்ள நவலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(71) கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சக்தி கனி(57). இந்த தம்பதியினருக்கு சக்தி நாராயணன் மற்றும் சக்தி கிருஷ்ணன் என்ற இரண்டு மகன்களும் சத்திய பாமா என்ற மகளும் உள்ளனர்.

tamilnadu

இந்நிலையில் சக்தி கனிக்கு பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சக்தி கனியின் சகோதரர் மற்றும் அவரது மனைவி சக்தி கனி வீட்டிற்கு வந்து சொத்து தொடர்பாக தகராறு செய்துள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் சக்தி கணியின் சகோதரர் மறைத்து வைத்திருந்த அரிவாள்  எடுத்து சக்தி கனியை வெட்டி இருக்கிறார். இதனை தடுக்க வந்த அவரது குடும்பத்தினருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

tamilnaduகாயத்தின் வலியால் அவர்கள் அலறவே  சக்தி கனியின் சகோதரர் மற்றும் அவரது மனைவி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வெட்டுப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.