திருமணத்திற்கு சம்மதிக்காத அக்கா மகள்.. தாய்மாமன் செய்த கொடூர செயல்!

திருமணத்திற்கு சம்மதிக்காத அக்கா மகள்.. தாய்மாமன் செய்த கொடூர செயல்!



Maman killed sister daughter in Karnataka

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தீபா. 21 வயதான இவரை தன்னுடைய சொந்த தாய்மாமன் மால்தேஷ் என்பவருக்கு தன்னுடைய அம்மா திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் தீபாவுக்கு படிக்க வேண்டும் எனவும், திருமணத்தில் விருப்பமில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

karnataka

ஆனால், தீபாவின் தாயார் தனது தம்பி மால்தேஸுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதில், மதுப்பழக்கத்திற்கு அடிமையான மால்தேஷ், குடித்துவிட்டு ஊரை சுற்றி வந்துள்ளார். இதனால் தீபா குடித்துவிட்டு ஊர் சுற்றும் அவனை எப்படி நான் திருமணம் செய்து கொள்வது என கூறியுள்ளார்.

இதனிடையே திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தீபா தனது தாய்மாமணி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த நிலையில் தீபாவை சமாதானம் செய்வதற்காக அவருடைய தாய் மாமன் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பேசியுள்ளார்.

karnataka

அப்போதும் தீபா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மால்தேஷ், தீபாவளி கடுமையாக தாக்கி அவரது கழுத்தில் துப்பட்டாவை கட்டி அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டுவது போல தொங்கவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு சம்மதிக்காததால் அக்கா மகளை தாய்மாமன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.