செல்பி பிரியர்களே உஷார்..! ஆற்றுக்கு அருகே ஆபத்து செல்பி.. புதுமணத்தம்பதி, நண்பர் என 3 பேர் பரிதாப பலி.!

செல்பி பிரியர்களே உஷார்..! ஆற்றுக்கு அருகே ஆபத்து செல்பி.. புதுமணத்தம்பதி, நண்பர் என 3 பேர் பரிதாப பலி.!



maharashtra-mumbai-beed-couple-died-taking-selfie-near

நண்பருடன் புதுமண தம்பதி ஆற்றுக்கு அருகே செல்பி எடுக்க முயற்சித்த போது நீரில் மூழ்கி பலியான சோகம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தம்பதி, நண்பர் என 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பீட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சித்திக் பதான் ஷேக் (வயது 22). இவரின் மனைவி தாஹா ஷேக் (வயது 20). தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்நிலையில், புதுமண தம்பதி நண்பர் ஸ்காத் என்பவருடன் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர். அங்கு, ஆற்றின் அருகே நின்றவாறு செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, புதுமண தம்பதி எதிர்பாராத விதமாக ஆற்றில் விழுந்துள்ளது.

maharashtra

இவர்களின் உயிரை காப்பாற்றும் பொருட்டு ஸ்காத்தும் ஆற்றில் குதித்த நிலையில், மூவரும் நீரில் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமண தம்பதிகள் மற்றும் நண்பர் செல்பி எடுக்க முயற்சித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.