குடும்பமே தற்கொலை செய்து மரணம்.. கணவனின் மதுப்பழக்கத்தால் மதுரையில் கண்ணீர் சோகம்.!

குடும்பமே தற்கொலை செய்து மரணம்.. கணவனின் மதுப்பழக்கத்தால் மதுரையில் கண்ணீர் சோகம்.!



Madurai Family Died by Suicide due to Husband Liquor Alcohol Activity 

 

தனிமனிதனுக்கும், அவனின் குடும்பத்திற்கும் மிகப்பெரிய எதிரியான, உடலையும்-மனதையும் கேடாக்கி தன்னிலை மறந்து செயல்பட வைக்கும் மதுவை ஒழிக்காத வரை, இங்கு மக்களுக்கான ஆட்சி நிறுவப்படாது. கேவல அரசியலின் சூழ்ச்சி இன்னும் எத்தனை குடும்பத்தை கருவருக்கப்போகிறது என எண்ணினால் நெஞ்சமெல்லாம் பதறும் வகையில் குடும்பமே மதுவால் உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரின் மனைவி வீரச்செல்வி. தம்பதிகளுக்கு 13 வயது மற்றும் 8 வயதுடைய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 

குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வந்த செந்தில் குமார், அவ்வப்போது மதுபானம் அருந்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே மதுபானம் அருந்தும் பழக்கம் எல்லை மீறியுள்ளது. 

இதனால் குடும்பம் தவித்துப்போக, ஒருகட்டத்தில் குடும்பத்தினர் இடையே சண்டை தொடர்ந்து இருக்கிறது. வாழ்க்கையில் விரக்தியடைந்த செந்தில் குமார், நேற்று தற்கொலை செய்துகொண்டு உயிரைமாய்த்தார். 

madurai

ஏற்கனவே செந்தில் குமாரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்துபோன குடும்பத்தினர், அவரின் தற்கொலையால் நிலைகுலைந்துபோக இன்று தாயும், மகள்களுமாக தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை விட்டனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், தாய் - 2 மகள்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தனர். விசாரணையில் மேற்கூறிய சோகம் தெரியவந்துள்ளது.