பாட்டியுடன் கால்வாயில் குளியல்.. நொடியில் நடந்த விபரீதத்தால், நீரில் மூழ்கி 10 வயது சிறுமி பரிதாப பலி.!

பாட்டியுடன் கால்வாயில் குளியல்.. நொடியில் நடந்த விபரீதத்தால், நீரில் மூழ்கி 10 வயது சிறுமி பரிதாப பலி.!



Madurai Chozhavanthan Minor Girl Died 

 

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், குலத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவருக்கு திருமணமாகி, 10 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி தனது பாட்டியுடன் கால்வாய் பகுதிக்கு குழிக்கச்சென்றுள்ளார். அச்சமயம் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்க, பதறிப்போன பாட்டி அவரை காப்பாற்றக்கூறி கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் யாழிசை நீரின் பிடியில் அடித்து செல்லப்பட, உடனடியாக விக்கிரமங்கலம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நீண்ட நேரத்திற்கு பின்னர், யாழிசையின் உடலை சடலமாக மீட்டனர். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக விக்கிரமங்கலம் கவலை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.