அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
திருமா, சீமான், ஆ.ராசாவின் நாக்கை அறுத்து ஜெயிலுக்கு போவேன் - பாஜக மாவட்ட செயலாளர் ஆவேசம்; 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!
திருமா, சீமான், ஆ.ராசாவின் நாக்கை அறுத்து ஜெயிலுக்கு போவேன் - பாஜக மாவட்ட செயலாளர் ஆவேசம்; 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!
இந்து மதத்தை பற்றி அவதூறு பேசும் நபர்களின் நாக்கை வெட்டி சிறைக்கு செல்ல அஞ்சமாட்டேன் என பொங்கிய பாஜக மாவட்ட செயலாளரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட பாஜக செயலாளர் சுசீந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், "திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ. ராசா ஆகியோர் நித்தியானந்தா போல தனிநாடை உருவாக்கி பல கருத்துக்களை கூறலாம். நாங்கள் சத்ரபதி சிவாஜி, சின்னமருது-பெரிய மருது வழியார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கப்பலோட்டிய தமிழன் உட்பட பல தலைவர்கள் பிறந்த புண்ணிய பூமி இது. எந்த மதத்தையும் சரி, நாங்கள் பிறந்த மதத்தையும் சரி அவதூறாக பேசியவர்களை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம். அரசியல் இலாபத்திற்காக இந்து மதம் குறித்து அவதூறு செய்தால் அவர்களின் நாக்கை வெட்டவும், சிறைக்கு செல்லவும், வழக்குக்கும் அஞ்சமாட்டோம்" என்று பேசினார்.
சுசீந்திரனின் பேச்சுக்கள் செய்திகளாக வெளியாகி இடதுசாரி கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.