மகள்களை சீரழிக்க வந்த கயவனை கொன்று, மரத்தில் தொங்கவிட்ட தாய்; பதறவைக்கும் சம்பவம்.!
காதலித்த பெண்ணை வீட்டு காவலில் வைத்த பெற்றோர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!
காதலித்த பெண்ணை வீட்டு காவலில் வைத்த பெற்றோர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் நெல்லூர் பேட்டையை சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையில் வேலை செய்யும் செல்வி என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த விஷயம் பெண் வீட்டார் தெரிய வர, குடும்பத்தினர் செல்வியை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதனையறிந்த பிரசாந்த் குடியாத்தம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் செல்விக்கும் எனக்கும் ஏற்கனவே பதிவு திருமணம் செய்துள்ளதாக சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.
இதனையடுத்து செல்வியின் வீட்டிற்கு சென்ற போலீசார் பெண் வீட்டாரிடம் பேசி செல்வியை பிரசாந்துடன் செல்ல அனுமதித்தனர். திரைப்பட பாணியில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.