#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
பொங்கலுக்கு ஊருக்கு வந்து, ஒரே சேலையில் சடலமாக தொங்கிய காதல் ஜோடி! வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்!
பொங்கலுக்கு ஊருக்கு வந்து, ஒரே சேலையில் சடலமாக தொங்கிய காதல் ஜோடி! வெளியான நெஞ்சை உருக்கும் காரணம்!
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள குந்தவாழுர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். 22 வயது நிறைந்த அவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசித்து வந்தவர் காயத்ரி. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பினை மீறி வீட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேவராஜ் பெங்களூரில் கார் ஓட்டி வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காதல் ஜோடி இருவரும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திரா என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது தங்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையே என்ற மன வருத்தத்தில் இருந்த தேவராஜ் மற்றும் காயத்ரி இருவரும் இரவு வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக கிடந்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைதீவிரயும் மேற்கொண்டு வருகின்றனர்.