புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா.?

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா.?



Local Holiday in pudukottai

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு 8-ம் தேதி ஓணம் பண்டிகைக்காக உள்ளூர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை செப்டம்பர் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் உள்ள வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.