மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விரிவுரையாளர்! வெளுத்துக்கட்டிய சக மாணவர்கள்!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விரிவுரையாளர்! வெளுத்துக்கட்டிய சக மாணவர்கள்!!



lecturer-gave-sexual-harassment-to-students

திருச்சி லால்குடி அருகே உள்ள குமுளூரில் அரசு கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதில் வினோத்குமார் என்னும் 33 வயதுடைய நபர் அந்த கல்லூரியில் வணிகவியல் துறை கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பி வாட்ஸாப்ப் -ல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சக மாணவர்கள் விஷயம் அறிந்து, வணிகவியல் துறை விரிவுரையாளர் செய்த செயலால் ஆத்திரமடைந்துள்ளனர். பின்னர் திடீரென்று நேற்று காலை வணிகவியல் துறை அறைக்குள் நுழைந்த மாணவர்கள் சிலர் வினோத்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் மயக்கம் அடைந்த வினோத்குமாரை அரசு மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகம் சேர்த்துள்ளது. பின்னர் இச்சம்பம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.