ஆபாச வீடியோ அனுப்பு! இல்லாட்டி இதுதான் நடக்கும்.... 14 வயது சிறுவர்கள் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்! அடுத்தடுத்த அதிர்ச்சியால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கதி..!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவியை சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டி, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து கூர்நோக்கு மையத்தில் அடைத்துள்ளனர்.
ராயக்கோட்டை சாலை பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதே வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் நபரின் மகள், அருகிலுள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
போலி இன்ஸ்டாகிராம் கணக்கால் மிரட்டல்
இந்த நிலையில், அந்தச் சிறுவனைச் சந்திக்க வந்த அவனது நண்பர்கள் இருவர், மேல் வீட்டில் வசிக்கும் மாணவி குறித்து விசாரித்துள்ளனர். மாணவியின் சமூக வலைதள விவரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டதாக தெரிகிறது.
அதன்படி, மாணவியின் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அவரது பெயரில் போலி Instagram கணக்கை உருவாக்கியுள்ளனர். பின்னர் அந்தக் கணக்கின் மூலம் மாணவியுடன் தொடர்பு கொண்டு, அவரது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாக பேசி மிரட்டியுள்ளனர்.
ஆபாச வீடியோ கேட்டு வற்புறுத்தல்
இதில் மட்டும் நின்றுவிடாமல், மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கே அனுப்பி பயமுறுத்தியுள்ளனர். “ஆபாச வீடியோக்களை அனுப்பினால் மட்டுமே இந்தப் புகைப்படங்களை வெளியிட மாட்டோம்” என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
மிரட்டலால் அச்சமடைந்த மாணவி சில ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த வீடியோக்களை மாணவியின் தந்தையின் வாட்ஸ்அப் எண்ணிற்கே அனுப்பியுள்ளனர்.
10 லட்சம் கேட்டு மிரட்டிய சிறுவர்கள்
கீழ் வீட்டில் வசிக்கும் சிறுவனின் செல்போன் எண்ணைப் பயன்படுத்தி வீடியோக்களை அனுப்பிய அவர்கள், “10 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் சமூக வலைதளங்களில் அனைத்தையும் வெளியிடுவோம்” என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, கீழ் வீட்டில் வசித்த சிறுவனிடம் விசாரித்துள்ளார். ஆனால் அவர் மற்றும் நண்பர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூன்று சிறுவர்களும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, போக்சோ மற்றும் சைபர் கிரைம் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலத்தில் உள்ள அரசு கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியையும், குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாடு குறித்து புதிய கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிஞ்சிலேயே பழுத்த 3 சிறார்கள்.. 14 வயது மாணவிக்கு., தமிழகத்தில் இப்படியா? திடுக்கிடவைக்கும் சம்பவம்..!