இதுதான் என்னுடைய கொள்கை.! அரசியல் என்ட்ரி குறித்து செம தெளிவாக நடிகர் ராகவா எடுத்துள்ள முடிவு!!
பரபரப்பான தேர்தல் நேரத்தில் சக போட்டியாளர்களுக்கு கமல் வெளியிட்ட அறிக்கை!! பரபரப்பில் எதிரணியினர்..
பரபரப்பான தேர்தல் நேரத்தில் சக போட்டியாளர்களுக்கு கமல் வெளியிட்ட அறிக்கை!! பரபரப்பில் எதிரணியினர்..
கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கமல்.
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதுமட்டும் இல்லாமல் மக்கள் நீதி மய்யம் சார்பாக பல்வேறு போட்டியாளர்கள் தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், தனது தான் போட்டியிடும் தொகுதியில் தன்னுடன் போட்டியிடும் சக வேட்பாளர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
தேர்தல் நெருங்கும் நேரத்தில், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் என் சக வேட்பாளர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல். என கமல் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் என் சக வேட்பாளர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல். pic.twitter.com/L62BKqPHpv
— Kamal Haasan (@ikamalhaasan) April 3, 2021