முடிவுக்கு வந்துள்ளது ஜெயலலிதாவின் வாரிசு பிரச்னை! தீர்ப்பளித்தது நீதிமன்றம்!

முடிவுக்கு வந்துள்ளது ஜெயலலிதாவின் வாரிசு பிரச்னை! தீர்ப்பளித்தது நீதிமன்றம்!



jeyalalitha-varisu

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி ஜெ.தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். 

deepak

இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் தீபா, தீபக் என்றும் ஜெயலலிதா தன் தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களும், அவர் வாங்கிய சொத்துக்களுக்கும் இவர்கள் தான் வாரிசுகள் என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும், ஜெயலலிதா இல்லத்தின் ஒருபகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.