Thanjavur: காதல் மனைவியை 6 மாதத்தில் கழுத்தறுத்து கொன்ற கொடூரம்; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!



in Thanjavur a Love Married Girl Killed By Husband

காதலித்தவரை கரம்பிடித்த இளம்பெண், திருமணமான 6 மாதத்தில் கணவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, பருத்திக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் தமிழரசன். இவரின் மனைவி ரேவதி. தம்பதிகளுக்கு புவனேஸ்வரி என்ற 20 வயது மகள் இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, கீழ்வன்னிப்பட்டு, அம்பலகார தெருவில் வசித்து வருபவர் சபரி (வயது 23). 

சபரி - புவனேஸ்வரி இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறவே, இருவரும் கடந்த பல மாதமாக காதலித்து வந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தைத்தொடர்ந்து, புவனேஸ்வரி மற்றும் சபரி தம்பதி வேலை பார்த்து வந்த செங்கல் சூளையில், ஒன்றரை மாதங்களுக்கு முன்பு புதுமணத்தம்பதி வந்து தங்கியிருந்துள்ளது.

இதையும் படிங்க: தஞ்சாவூர்: 7 மாத கைக்குழந்தை தொடையில் பலூன் சிக்கி மரணம்; பெற்றோர்களே கவனம்.!

thanjavur

கழுத்தறுத்து கொலை

இந்நிலையில், நேற்று முன்தினத்தில் புவனேஸ்வரியின் குடிலில் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் பார்த்தபோது, புவனேஸ்வரி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தார். சபரி அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான சபரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 
 

இதையும் படிங்க: #Breaking: ரூ.250 பந்தயத்திற்கு ஆசைப்பட்டு மாணவர் பரிதாப பலி.. முட்டித்தூக்கிய காளை.. தஞ்சாவூரில் சோகம்.!