14 வயது சிறுமிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை; தஞ்சாவூரில் கொத்தானர் கைது.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாஸ்தாசாவடி பகுதியில் வசித்து வருபவர் சக்திவேல் (வயது 41). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் வளாகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடிய 14 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சிறுமிகள், தங்களின் பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 70 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்.!
பாலியல் தொல்லை
இதனையடுத்து, சிறுமிகள் கொடுத்த தகவலின்பேரில், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் சக்திவேலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுமிகளின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. மேலும், சக்திவேல் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை சவுக்குத்தோப்பில் பலாத்காரம் செய்த காதலன்.. நண்பனையும் அத்துமீற அனுமதித்த கொடுமை.!