பள்ளி மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400 க்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பெருமாள் (வயது 58) என்பவர் பணியாற்றி வருகிறார்.
குழந்தைகள் நலத்துறை விசாரணை
இதனிடையே, பள்ளியில் பயின்று வந்த 7 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் பெருமாள் பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தை நல அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்தனர்.
போக்ஸோவில் கைது
விசாரணையில் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்ததை அதிர்ச்சி வாக்குமூலமாக பதிவு செய்துள்ளார். இதன்பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெருமாளை போக்ஸோவில் கைது செய்தனர். மேலும், அவர் பணியிடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம்; தங்கை தற்கொலை., காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி.!
இதையும் படிங்க: திரைப்பட பாணியில் பயங்கரம்.. கல்லைக்கட்டி கடலுக்குள் வீசி மீனவர் கொலை.!