எதிரெதிர் வீட்டு குடும்ப சண்டையில் ஆவேசம்.. 15 முறை மூதாட்டியை கத்தியால் குத்திய கொடுமை.. மயிலாடுதுறையில் ஷாக்.!



in Mayiladuthurai a Man Murder Attempt 


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மதுரா நகர், டெலிகாம் நகர் பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா (வயது 65). இவர் ஓய்வுபெற்ற ஆசிரியரி ஆவார். இவரின் எதிர் வீட்டில் இருப்பவர் 25 வயதுடைய பொறியியல் பட்டதாரி பிரேம். 

இவர்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று காலை கோலம்போடும்போது, இரு வீட்டார் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Mayiladuthurai

சரமாரியாக குத்திக்கொலை

அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற பிரேம், நிர்மலாவை சுமார் 15 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயற்சித்தார். 

இதையும் படிங்க: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா; துக்க வீட்டில் நடந்த கொடுமை.!

உடலில் படுகாயத்துடன் நிர்மலா அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தார்பாய் அமைக்கும் பணியில் சோகம்; ஒருவர் பலி., காப்பாற்ற முயன்ற 3 பேர் காயம்.!