4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா; துக்க வீட்டில் நடந்த கொடுமை.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசித்து வரும் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு, வெளியூரில் வசித்து வரும் தம்பதி, தங்களின் நான்கு வயது மகளுடன் சென்றுள்ளனர். அப்போது, சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
திடீரென அவர் மாயமான நிலையில், சிறுமியை உள்ளூரில் தேடிய போது, கொட்டகை ஒன்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டார். விசாரித்தபோது, அவர் பாலியல் சீண்டலை எதிர்கொண்டது தெரியவந்தது.
பாலியல் தொல்லை
இதனையடுத்து, சிறுமி மருத்துவ சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தகவல் அறிந்த சீர்காழி அனைத்து மகளிர் காவல்துறையினர், விசாரணை செய்தனர்.
இதையும் படிங்க: தார்பாய் அமைக்கும் பணியில் சோகம்; ஒருவர் பலி., காப்பாற்ற முயன்ற 3 பேர் காயம்.!
சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா தமிழ்வாணன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 2 இளைஞர்கள் படுகொலை.!