நடிகை குளித்த தண்ணீர் தீர்த்தமா? ஆண்களுக்கான ஸ்பெஷல் சோப் தயாரித்து விற்பனை..!
#Breaking: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. 3 சிறார்கள் கொடூர கொலை? சடலமாக ஏரியில் மிதந்த மாணவர்கள்.!

முகம் தீயில் எரிக்கப்பட்ட நிலையில் 3 இளைஞர்களின் சடலம் ஏரியில் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர், ஏரிக்கரை தாங்கல் பகுதியில் 3 இளைஞர்களின் சடலம் இன்று மிதந்து. இந்த இளைஞர்களின் முகத்தில் வெட்டுக்காயத்துடன், தீயில் எரிக்கப்பட்ட்டவாறு சடலமாக மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் சரக்கு வாங்க மூதாட்டி காது அறுத்து கொலை; மதுரையில் பகீர்.!
சடலம் மீட்பு
காத்தான்குளம், சீவரம் கிராமத்தில் உள்ள ஏரியில் இளைஞர்கள் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததால் பேரில், 17 வயதுடைய 3 சிறார்களின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இவர்கள் சஞ்சய் உட்பட 3 பேர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விஷ்வா, பரத், சத்ரியன் என தெரியவந்துள்ளது.
காவல்துறை விசாரணை
இவர்கள் உயிரிழந்து 3 நாட்கள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படும் நிலையில், மூவரின் உடலும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மூவரும் வாலாஜாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பயின்று வந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னை குற்றவாளி ஆக்கிடாதீங்க.. சிவகங்கை காவல்துறைக்கு கடற்படை வீரர் எச்சரிக்கை.. காரணம் என்ன?