ஈரோடு: நண்பர்களின் இழப்பை தாங்க முடியாமல், 28 வயது இளைஞர் தற்கொலை.. பெற்றோர் கண்ணீர்.!



in Erode Youth Dies By Suicide 07 March 2025 

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை, குருவெரெட்டியூர், காந்தி நகரில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரின் மனைவி ஜெயம்மாள். தம்பதிகளுக்கு பூபாலன் என்ற 28 வயதுடைய மகன் இருக்கிறார். இவர் எஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு, இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

பூபாலனின் நண்பர்கள் பாபு, கவின். கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில், இருவரும் மறைந்தனர். நண்பர்களின் இழப்பு பூபாலனை வாட்டி இருக்கிறது. மேலும், தனக்கு உடல்நலம் குன்றி வருகிறது எனவும் பெற்றோரிடம் அவர் புலம்பி இருக்கிறார். 

இதையும் படிங்க: #Breaking: அதிமுக கூட்டத்தில் சலசலப்பு.. நாற்காலி வீசி தாக்குதல்.. முன்னாள் அமைச்சர் முன் பரபரப்பு சம்பவம்.!

erode

தூக்கிட்டு தற்கொலை

இதனால் ஈரோடு பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் சிகிச்சைக்கும் பெற்றோர் பூபாலனை அனுமதி செய்தனர். மருத்துவ சோதனையில் பூபாலனின் உடல்நிலை நன்றாக இருப்பதாக கூறிவிட, நண்பர்களின் இழப்பால் துடித்து வந்தவர் வீட்டில் தனியே இருந்தபோது தற்கொலை செய்துகொண்டார்.  

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், பூபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த விஷயம் தொடர்பார்ப்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூபாலன் மற்றும் அவரது நண்பர்களின் பெற்றோர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

 

இதையும் படிங்க: திருப்பூர்: திடீரென காரின் கதவை திறந்ததால் சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!