திருப்பூர்: திடீரென காரின் கதவை திறந்ததால் சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!



in-erode-thalavadi-man-dies-accident


காரில் பயணம் செய்வோர், கதவை திறக்கும் முன்பு தனது வாகனத்திற்கு பின்னால் வேறேதும் வாகனம் வருகிறதா? என சோதிக்காத பட்சத்தில், எந்த மாதிரியான சோகம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

சொந்த ஊர் செல்ல முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர் செல்ல பாலகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில், அண்ணா நகர் சாலையில் பயணம் செய்தார். 

இதையும் படிங்க: முன்னாள் காதலனுடன் குடித்தனம்.. மனைவியின் கதைமுடித்த கணவன்.. ஈரோட்டில் பயங்கரம்.!

அப்போது, சாலையோரம் இருந்த காரில் அமர்ந்தவர்கள், காரின் கதவை திடீரென திறந்து இருக்கின்றனர். இருசக்கர வாகனத்தில் பயணித்த பாலகிருஷ்ணன், இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

காரின் கதவு இருசக்கர வாகனம் மீது மோதியதில், பாலகிருஷ்ணன் கீழே விழுந்தார். அவரின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர், பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க: முயல் இரத்தம் கலந்த எண்ணெய் பறிமுதல்; 3 கடைகளுக்கு ஈரோட்டில் சீல்.!