மணக்கோலத்தில் பார்க்கவேண்டிய பிள்ளைகளை சடலமாக பார்த்த பெற்றோர்.. திண்டுக்கல்லில் சோகம்..!



in Dindigul Nursing College Student Dies by Suicide 

 

நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சோகம் நிலக்கோட்டையில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, கே. குரும்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சித்திரைவேல் (வயது 55). இவரின் மகள் நித்திய ரூபிணி. நிலக்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், நர்சிங் துறை பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: திண்டுகல்லில் அதிர்ச்சி.! பெற்ற மகனை கொலை செய்த தந்தை.! சிறிய சண்டையால் துடி துடித்து பறிபோன உயிர்.!

நிலக்கோட்டை, பிள்ளையார்நத்தம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா. இவரின் மகன் ஜெயசீலன். நித்திய ரூபிணி - ஜெயசீலன் உறவினர்கள் ஆவார்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமண ஏற்பாடுகளும் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்றது. 

Dindigul

திருமணத்திற்கு காத்திருந்தவர்களுக்கு சோகம்

இதனிடையே, ஜெயசீலன் திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து வேலைகளை செய்து வந்துள்ளார். அப்போது, கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஜெயசீலன் உயிரிழந்தார். திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த இருதரப்பு குடும்பத்திற்கு, ஜெயசீலனின் மறைவு அதிர்ச்சியை தந்தது.

மேலும், நித்திய ரூபிணியும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில், தனிமையிலேயே இருந்து வந்துள்ளார். காதலனின் நினைவு அவரை வாட்டி இருக்கிறது. ஒருகட்டத்தில் மனமுடைந்த நித்திய ரூபிணி, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க: நிலப்பிரச்சனையில் இப்படியா? தகர கொட்டகைக்குள் பாய்ந்த கார்? திமுக பெண் நிர்வாகி மீது புகார்.!