விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
திண்டுகல்லில் அதிர்ச்சி.! பெற்ற மகனை கொலை செய்த தந்தை.! சிறிய சண்டையால் துடி துடித்து பறிபோன உயிர்.!

தற்போது இருக்கும் காலகட்டத்தில் கொலை, கொள்ளை அனைத்தும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இந்நிலையில், திண்டுக்கல்லில் பெற்ற மகனையே வெட்டிக்கொலை செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் முனியாண்டி என்பவர். இவருக்கு ரஞ்சித் குமார் என்கின்ற மகன் உள்ளார். ரஞ்சித் குமார் வீட்டில் சண்டை சேவலை வளர்த்து வந்துள்ளார். இந்த சண்டை சேவலை தந்தை முனியாண்டி வேறொரு இடத்தில் மாற்றி கட்டி வைத்துள்ளார்.
ஆகையால், ரஞ்சித் குமார் கோபமடைந்து தந்தையிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, சண்டை இருவருக்கும் கைகலப்பாக மாறிய நிலையில் தந்தை முனியாண்டி ஆத்திரமடைந்து பெற்ற மகன் என்றும் பாராமல் அரிவாளை கொண்டு ரஞ்சித் குமாரை வெட்டி கொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: நிலப்பிரச்சனையில் இப்படியா? தகர கொட்டகைக்குள் பாய்ந்த கார்? திமுக பெண் நிர்வாகி மீது புகார்.!
இச்சம்பவத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரஞ்சித் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெற்ற மகனையே வெட்டிக் கொன்ற தந்தை முனியாண்டியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்: ஒரே மாதத்தில் 50 பேரிடம் ரூ.50 இலட்சம் மோசடி.. வீட்டில் வேலை, படுத்துக்கொண்டே சம்பாதிங்கள் என விளம்பரம்.!