விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
திண்டுக்கல்: கட்டிட தொழிலாளிகள் இருவர் அடித்துக்கொலை;

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு, கொன்னம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அழகுமலை (வயது 55). இதே ஊரைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 50). இருவருக்கும் திருமணமாகவில்லை. தற்போது வரை கட்டிட தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரையும் குபேந்திரன் என்பவன் மகன் நவீன் (வயது 22) தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அளித்த புகாரின் பேரில், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் இரயில் மீண்டும் அதிர்ச்சி.. மிதமிஞ்சிய போதையில் பயங்கரம்.. திண்டுக்கல்லில் கொடூரன் கைது.!
இருவர் கொலை
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் அழகுமலை, மனோகர் வேங்கடசாஸ்திரி கோட்டை பகுதியில் சென்றபோது, உருட்டுக்கட்டையுடன் பின்தொடர்ந்த நவீன், இருவரையும் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தில் கட்டிட தொழிலாளர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல்துறையினர், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நவீனை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்: துடைப்பத்தால் அடித்து வரதட்சணை கொடுமை., காதல் திருமணம் செய்த 3 மாத கர்ப்பிணி தற்கொலை..!