ஊரடங்கிலும் ஓயாத உல்லாசம்..! நேரில் பார்த்த மகனின் வெறிச்செயல்.

ஊரடங்கிலும் ஓயாத உல்லாசம்..! நேரில் பார்த்த மகனின் வெறிச்செயல்.


Illegal relationship sengal sulai murder

மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(30). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் மணல் கடத்தலை தடுக்க இன்பார்மராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு அருகே உள்ள செங்கல் சூளையில் இரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

அதனை அடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் ரஞ்சித் என்பவரின் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்டு இருந்தது பெண்கள் விவகாரமாக தான் இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது ரஞ்சித் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவரின் தாயாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்ப்பட்டுள்ளது. இதனை அறிந்த விமல் தனது தாயாரை கண்டித்துள்ளார். ஆனால் எதனையும் கண்டுக்கொள்ளாமல் விமலின் தாய் ரஞ்சித்துடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். விமலின் தாய் ரஞ்சித்தை விட 15 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

vimal

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் விமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் விமலின் தாயும் ரஞ்சித்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனால் கோபமான விமல் தனது நண்பர்கள் மூலம் ரஞ்சித்தை செங்கல் சூளைக்கு அழைத்து வர செய்து அவரின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.