என்னுடைய பாடலில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள்-இளையராஜாவின் பேச்சுக்கு பரவும் எதிர்ப்பு

என்னுடைய பாடலில் தான் நீங்கள் வாழ்கிறீர்கள்-இளையராஜாவின் பேச்சுக்கு பரவும் எதிர்ப்பு


ilayaraja-song

அன்று முதல் இன்று வரை அனைவரையும் தான் இசையின் மூலம் ஈர்த்தவர்தான் இசைஞானி இளையராஜா.  இசை என்றாலே இளையராஜா  தான். அவரின் இசையை விரும்பாத மக்கள் யாருமே கிடையாது.
ஒரு பக்கம்  நல்ல பாடல்களை கொடுத்தாலும் அவரின் சில விஷயங்கள் அவரை  சர்ச்சையில் சிக்கவைக்கின்றன . அப்படி தான் நேற்று நடந்த இளையராஜா இசைக் கச்சேரியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் போது ஒரு போலீஸ் அதிகாரி இடையில் நுழைந்துள்ளார்.

Ilayaraja

அதைப்பார்த்த இளையராஜா என்னவென்று கேட்க, அவர் தாகமாக இருக்கிறது என்றார்கள் அதான் வந்தேன் என கூறியுள்ளார், ஆனால்  அவர் கூறியதை கேட்டும் இளையராஜா  கோபமாகி அதிகாரியை திட்ட அவர் இளையராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.

Ilayaraja

 மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள், பல அழகான பாடல்கள் கொடுத்தவர்,  மேடையில் அப்படி பேசியிருக்க  கூடாது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.