திருமணமான ஒரு வருடத்திலேயே, ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன் மனைவி.! வெளியான அதிர்ச்சி சம்பவம்!!

திருமணமான ஒரு வருடத்திலேயே, ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய கணவன் மனைவி.! வெளியான அதிர்ச்சி சம்பவம்!!


husband-wife-commit-suicide-for-family-issue

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள பொண்ணான்டம்பாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவர் தனியார் பைப் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கேசவராஜுக்கும், ஊட்டியைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கேசவராஜ் மற்றும் கிருத்திகா இருவரும் இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களது அறையை விட்டு வெளியே வரவில்லை.இதில் சந்தேகமடைந்த கேசவராஜின் பெற்றோர்  அறைகதவை தட்டி பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து அவர்கள் ஜன்னலை உடைத்து அறையின் உள்ளே பார்த்துள்ளனர். அங்கு தம்பதியினர் இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர்.

marriage

அதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த போலீசார்கள் இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கேசவராஜ் மற்றும் கிருத்திகா இருவரும் திருமணமானது முதலே சண்டைபோட்டு வந்ததாகவும்,  குடும்ப பிரச்சினை காரணமாகவே இருவரும் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனை தொடர்ந்து போலீசார்கள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.