மனைவியை கடலுக்கு அழைத்து உறவினர்கள் முன்பு கணவர் செய்த கொடூரம்... அம்பலமான உண்மை!!

மனைவியை கடலுக்கு அழைத்து உறவினர்கள் முன்பு கணவர் செய்த கொடூரம்... அம்பலமான உண்மை!!



Husband murder his wife in cuddalore

கடலூர் மாவட்டம் பச்சாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் - கிருத்திகா தம்பதியினர். இவர்கள் சிதம்பரம் , பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார் பேட்டை கடற்கரை பகுதிக்கு உறவினர்களுடன் மனைவியை அழைத்து சென்றுள்ளார் ராமநாதன். அங்கு சென்று குளித்து கொண்டிருந்த போது மனைவி கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாக ராமநாதன் கிருத்திகாவை தூக்கி சென்றுள்ளார்.

இதனை அங்கிருந்த காவல் துறையினர் பார்த்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் கிருத்திகா கடல் அலையில் சிக்கி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இதனை கேட்டு சந்தேகமடைந்த காவல் துறையினர் கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Cuddalore

அதனை தொடர்ந்து ராமநாதனிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியுள்ளார். அதற்கிடையில் உடற்கூறு ஆய்வில் கிருத்திகாவை வலுக்கட்டாயமாக தண்ணீரில் தள்ளி அழுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளனர்.  மேற்கொண்டு ராமநாதனிடம் விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார்.

அதில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கடலில் தள்ளி கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து போலீசார் ராமநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.