குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்... மனைவி இறந்ததாக எண்ணி கணவர் எடுத்த விபரீத முடிவு...

குடும்பத்தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்... மனைவி இறந்ததாக எண்ணி கணவர் எடுத்த விபரீத முடிவு...



husband-murder-his-wife-in-coimbatore

கோயம்பூத்தூரை சேர்ந்தவர் பூபாலன் - ஷாலினி தம்பதியினர். பூபாலன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவதினத்தன்று பூபாலன் ஷாலினி தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமான பூபாலன் மனைவியின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார் ஷாலினி. கீழே விழுந்த ஷாலினி இறந்து விட்டதாக எண்ணியுள்ளார்.

Coimbatore

அதனையடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்த பூபாலன் மன அழுத்ததில் வீட்டில் இருந்த மற்றோரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பூபாலன் மனைவி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.