நள்ளிரவில் கேட்ட முனகல் சத்தம்! போதை இறங்கியநிலையில் கணவன் கண்ட மோசமான காட்சி! பின் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!

நள்ளிரவில் கேட்ட முனகல் சத்தம்! போதை இறங்கியநிலையில் கணவன் கண்ட மோசமான காட்சி! பின் துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!



husband-killed-wife-with-illegal-lover

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே புங்கவர்நத்தம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் சண்முகம். 59 வயது நிறைந்த இவர் விவசாய கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவரது முதல் மனைவி குடும்ப தகராறு காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார். அதனை தொடர்ந்து சண்முகம் இரண்டாவதாக மாரியம்மாள் என்ற 45 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.சண்முகத்தின் கடைசி மகனை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியாக பல ஊர்களில் வசித்து வருகின்றனர். 

 சண்முகம் அதிகாலை எழுந்து வயலுக்கு சென்று வருவது வழக்கம்.அதுமட்டுமின்றி பல வேலையாக வெளியூர்களுக்கும் அவ்வப்போது சென்று வருவார். இந்நிலையில் சண்முகத்தின் வீட்டிற்கு எதிரே புதிய வீடு ஒன்றை  கட்டிக்கொண்டிருந்த ராமமூர்த்தி என்ற 28 வயது இளைஞருடன் மாரியம்மாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி, உல்லாசமாக இருந்துள்ளனர். இதுகுறித்து சண்முகத்திற்கு  தெரியவந்த நிலையில் அவர் மனைவியை கண்டித்துள்ளார் ஆனால் இருவரும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும் ராமமூர்த்தி வயது என்ன?  எனது வயது என்ன? அபாண்டமாக தனது கணவர் சந்தேகப்படுவதாக மாரியம்மாள் ஊர் மக்களிடம் கூறி நாடகமாடியுள்ளார்.

illegal affairs

இந்நிலையில் தனது மனைவியின் கள்ளக்காதலை ஊர்மக்களிடம் நிரூபிக்க முடிவு செய்த அவர் விலையுயர்ந்த 3 செல்போன்களை வாங்கி வீட்டின் ஆங்காங்கே வைத்துள்ளார். அதில் சண்முகம் வீட்டில் இல்லாத நேரங்களில் ராமமூர்த்தி வீட்டிற்கு வருவதும், மாரியம்மாவுடன் உல்லாசமாக இருப்பதும் செல்போன்களில் பதிவானது. அதனை ஊர் மக்களிடம் காண்பித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென சண்முகம் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு சண்முகம் வீட்டினுள்ளே தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் மாரியம்மாள் பேச்சு சத்தம் கேட்டுள்ளது. இதில் தூக்கம் கலைந்து சண்முகம் எழுந்து சென்ற நிலையில் அவரது மனைவியும்,  ராமமூர்த்தியும் தனிமையில் இருப்பதை கண்டுள்ளார்.

இதில்  ஆத்திரமடைந்த அவர் அரிவாளை எடுத்து ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார். மேலும் மாரியம்மாளையும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இருவரும் உயிரிழந்தனர் அதனைத் தொடர்ந்து சண்முகம் பசுவந்தனை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார்  சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.