குடும்பத் தகராறில் மனைவியை தீ வைத்துக் கொளுத்திய கொடூர கணவன்!

குடும்பத் தகராறில் மனைவியை தீ வைத்துக் கொளுத்திய கொடூர கணவன்!



Husband fired wife in Vellore

வேலூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 

Husband and wife fight

இதில் பார்த்திபன் கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். அதேபோல் தனலட்சுமி பிரபல நகை கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தனலட்சுமியின் சித்தப்பா மகள் உயிரிழந்த நிலையில் சடங்குகள் காரியம் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் பார்த்திபன் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பார்த்திபனுக்கும், தனலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென வீட்டில் இருந்து தனலட்சுமி அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது தனலட்சுமி தீக்காயுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Husband and wife fight

இதனையடுத்து உடனடியாக தனலட்சுமி மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே பார்த்திபன் தனலட்சுமியின் பெற்றோருக்கு கால் செய்து உங்களுடைய மகள் தீ வைத்துக் கொண்டால் என கூறிவிட்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.