மகன் வயதுடைய பையனுடன் மனைவிக்கு கள்ளக்காதல்!. மகளுடன் தீ குளிக்க முயன்ற கணவன்!.

மகன் வயதுடைய பையனுடன் மனைவிக்கு கள்ளக்காதல்!. மகளுடன் தீ குளிக்க முயன்ற கணவன்!.


husband-and-daughter-get-suicide-for-his-illegal-affair


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். ஐஸ் வியாபாரியான இவருக்கு, மனைவி முருகம்மாள் (36). இவர்களுடைய மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் நேற்று மாரியப்பன் தனது மகளுடன் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்தார். திடீரென்று  தன் உடலில் மீதும், மகளின் உடல் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

illegal affairs

இதை பார்த்து அந்த பகுதியில் நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்து. உடனடியாக ஓடி சென்று மாரியப்பனின் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதனையடுத்து மாரியப்பனையும், அவருடைய மகளையும் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

முரும்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த மாரியப்பன் மனைவியை கண்டித்து உள்ளார். இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

illegal affairs

இதுகுறித்து அவர் கூறுகையில்,என் மனைவிக்கு 36 வயசாகிறது. மகன் முறையுள்ள 19 வயசு பையனுடன் ஓடிவிட்டார். மேலும், வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார்.

எனவே மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மகளுடன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.