அடக்கொடுமையே!! மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு அழையும் ஏழைத்தாய்... கடத்திச் சென்று மிரட்டும் அதிகாரிகள்..!

அடக்கொடுமையே!! மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு அழையும் ஏழைத்தாய்... கடத்திச் சென்று மிரட்டும் அதிகாரிகள்..!



humility-a-poor-man-who-calls-for-justice-for-the-death

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியில் கணவனை இழந்து வசித்து வரும் பெண் பிரியா. இவருக்கு 6 குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மூத்த மகனை ஒரு திருட்டு வழக்கில் தாம்பரம் ரயில்வே போலீஸ் கடந்த மாதம் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்கு வாந்தி, பேதி, வலிப்பு ஏற்பட்டதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் சிறுவன் பூரியும் மோரும் சாப்பிட்டதால் இறந்து விட்டதாக கூறி வார்டன்கள் சமாளித்துள்ளனர்.

Poor mother

இந்நிலையில் சிறுவனின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சடைந்த தாய் பிரியா தன் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அழுது புலம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . இதனால் அந்த சிறுவனின் உடல் உடற்கூறாய்விற்காக கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பணியாற்றும் 6 வார்டன்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சிறுவனின் தாய் பிரியாவை கடத்தி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் என்பவரே சிறுவனின் தாயார் பிரியாவை நேரடியாக மிரட்டியதாகவும் இதனால் பிரியா சமூக ஆர்வலர்கள் உதவியுடன் டிஎஸ்பி பிரதாப்பை சந்தித்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Poor mother

இதனையடுத்து தன்னை கடத்தி மிரட்டும் நபர்களை கைது செய்யக்கோரியும் இல்லாவிட்டால் அவர்கள் தனது மகனை அடித்துக் கொண்றதற்கான ஆவணங்களை அழித்து விடுவார்கள் என்றும் பிரியா கூறியுள்ளார் . மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.