இன்று 5 மாவட்டங்களில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



heavy rain alert for 5 districts

காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், நீலகிரி, கோயம்பத்தூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையானது 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

chennai

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவில் நீலகிரியில் தலா 15 சென்டிமீட்டரும், கோயம்புத்தூரில் தலா 11 சென்டிமீட்டரும், கன்னியாகுமரியில் தலா 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.