நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. மினி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான கன்னியாஸ்திரி..!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.. மினி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான கன்னியாஸ்திரி..!



heart-wrenching-scenes-the-nun-who-was-trapped-under-th

தூத்துக்குடி மாவட்டம் செட்டிவிளை மணல்மாதா கோயில் பகுதியில் வசித்து வருபவர் குருசுமிக்கேல். இவருக்கு ஜெயசெல்வி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் குமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியில் உள்ள இயேசுவின் திரு இருதய சபையில் தங்கி கன்னியாஸ்திரியாக இறைப்பணி மற்றும் சமூகப்பணி ஆற்றி வருகின்றார். மேலும் இவர் அருகில் உள்ள புனித சேவியர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கன்னியாஸ்திரி ஜெயசெல்வி திருப்பலியில் கலந்து கொள்வதற்காக தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மினி பஸ் ஒன்று கன்னியாஸ்திரி சென்ற ஸ்கூட்டரை முந்தி சொல்ல முயற்சித்த போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டரை இடித்து தள்ளியது.

Road accident

இந்த சம்பவத்தில் கன்னியாஸ்திரி மினி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய மினி பஸ் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.