கொடுமையிலும் கொடுமை..! 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு அழைத்துச்சென்று தலைமையாசிரியர் செய்த காரியம்.!

கொடுமையிலும் கொடுமை..! 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு அழைத்துச்சென்று தலைமையாசிரியர் செய்த காரியம்.!



headmaster sexual torture to school girl

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா மாச்சம்பட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம்(ஜூலை 21) 5 வகுப்பு பயிலும் 11வயது பள்ளி மாணவிக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

நேற்று முன்தினம் அப்பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு மாணவ, மாணவியர் சென்றிருந்தனர்.  அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்வண்ணன் 5-ம் வகுப்பு மாணவியை வகுப்பறைக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மனைவி நடந்த சம்பவத்தை தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சிஅடைந்த மாணவியின் தந்தை இது பற்றி காவல்நிலையத்தில்  புகார்செய்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பால்வண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைத்தனர்.