பள்ளி மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர்! சந்தோஷத்தில் பெற்றோர்கள்!

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அமைச்சர்! சந்தோஷத்தில் பெற்றோர்கள்!


happy news for school students


பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகும் மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், குழந்தைகள் தினவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

school students

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் இனி பள்ளிகளில் வேலைநேரத்தில் மணவர்கள் தண்ணீர் அருந்த ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகும் 10 நிமிடம் ஒதுக்கப்படும் என தெரிவித்தார். 

மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதை தவிர்த்து மாணவர்கள் ஆரோக்கியத்துடன் வாழவும், கல்வி கற்கவும் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு தண்ணீர் அருந்த நேரம் ஒதுக்கப்படும் எனத் தெரிவித்தார்.