காதலனை நம்பி தாலிகட்டிய 5 நாட்களில் வீடுதிரும்பிய பெண் காட்டுப்பகுதியில் கொடூர கொலை : நடந்த பயங்கரம்..! 

காதலனை நம்பி தாலிகட்டிய 5 நாட்களில் வீடுதிரும்பிய பெண் காட்டுப்பகுதியில் கொடூர கொலை : நடந்த பயங்கரம்..! 



Girl murdered in thirunelveli

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பெண்மணி இசக்கிலட்சுமி (வயது 23). இவருக்கும், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷ் என்பவருக்கும் செப் 1 ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 ம் தேதி இரவில் இசக்கிலட்சுமி தனது காதலன் ராம்குமார் என்பவருடன் ஓட்டம் பிடித்தார். வெங்கடேசனுக்கு மற்றொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். 

ஊரைவிட்டு ஓடிய காதல் ஜோடி சென்னையில் அறையெடுத்து 5 நாட்கள் தங்கியிருந்த நிலையில், தனது காரியம் முடிந்தது என்று எண்ணிய காமுகன் ராம்குமார் காதலியை கைவிட்டுள்ளார். இதனால் என்ன செய்வது என்று அறியாத இசக்கிலட்சுமி, மீண்டும் கல்லிடைகுறிச்சியில் உள்ள தாயின் வீட்டிற்கே வந்துள்ளார். 

Thirunelveli district

வீட்டில் இருந்த இசக்கிலட்சுமி திடீரென மாயமாகவே, அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்நிலையில், அவரின் உடல் அங்குள்ள காட்டுப்பகுதி ஓடையில் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலை விவகாரத்தில் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த ஆனந்த் மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் நடந்த விசாரணையில், தனது சகோதரன் வெங்கடேஷை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இசக்கி லட்சுமியை நண்பர் சிவாவுடன் சேர்ந்து காட்டுப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று கழுத்தறுத்து கொலை செய்தது அம்பலமானது. சிவா, ஆனந்த் ஆகியோரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.