#Breaking# சென்னை மெரினாவில் பதட்டம்! தீ விபத்து ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது!

#Breaking# சென்னை மெரினாவில் பதட்டம்! தீ விபத்து ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது!



fire-accident-in-chennai


சென்னையில் மீனவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று பட்டினப்பாக்கம் டுமீல் குப்பம். இந்த குப்பத்தில்  வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன.  

இந்தநிலையில் பட்டினப்பாக்கம் டுமீல் குப்பத்தில் உள்ள  குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

அந்த தீ மளமளவென பற்றி எரிந்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதில் 60-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

fire accident

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட அந்த சமப்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.