மகளை கர்பமாக்கிய தந்தை! தாயின் அதிர்ச்சி முடிவால் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.

மகளை கர்பமாக்கிய தந்தை! தாயின் அதிர்ச்சி முடிவால் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.



father-raped-his-daughter

பீகார் மாநிலத்தை சேர்ந்த சர்மா என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்துவந்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அவர் செய்த கொடூர செயலால் அவர் பெற்ற மூத்த மகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட சர்மாவின் மனைவி மூத்த மக்களிடம் விசாரித்துள்ளார். இதனையடுத்து சர்மாவின் மகள் தனக்கு பிறந்த குழந்தைக்கு அப்பாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சர்மாவின் மனைவி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சர்மாவை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்தது சர்மா தான் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து சர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.