சொந்த மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது.!



Father raped daughter in Nilgiris

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் சந்திரன். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், நான்கு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளத்துள்ளார்.

தற்போது அந்த பெண்ணுக்கு 17 வயதாகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Nigiris

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போதே தனது தந்தையான சந்திரன் மற்றும் அவரது மனைவியின் தம்பி நந்தகுமார் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

Nigiris

இதனையடுத்து இருவரையும் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் கூடலூர் சிறையில் அடைத்தனர்.