விவசாயத் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி.. போலீசார் விசாரணை..!!

விவசாயத் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி.. போலீசார் விசாரணை..!!



Farmer found dead mysteriously in farm garden.. Police investigating..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே விவசாயி ஒருவர் மர்மமான முறையில் விவசாய தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் நடுவிக்கோட்டை பகுதியில் வசிப்பவர் விவசாயி செல்லக்கண்ணு. இவர் நேற்று முன்தினம் காலை அவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். 

அப்போது, அவரது விவசாய தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் செல்லக்கண்ணு சடலமாக கிடந்தார். இந்த தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, செல்லகண்ணுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்லக்கண்ணுவின் மரணம் குறித்து  பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விவசாயி ஒருவர் அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.