2 வயது சிறுவனின் தொண்டையில் சிக்கிய ஊக்கு., அறுவை சிகிச்சை இன்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!!



Doctors remove safety pin from 2 years old boy's  Throat

திருச்சியில் குண்டடூர் பரமா என்னும் காலனியை சேர்ந்த கோபிநாத்தின் இரண்டு வயது மகன் ஊக்கை விழுங்கியுள்ளார். 

பின்னர் தொண்டையில் சிக்கிக்கொண்ட வலியில் கதறி அழுதுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு எக்ஸ்ரே மூலம் ஊக்கு விரிந்த நிலையில் தொண்டையில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை எதுவுமின்றி ஸ்கோப்பி என்று அழைக்கப்படும் உள்நோக்கி கருவி மூலம் சிறுவனின் தொண்டையில் இருந்து ஊக்கு அகற்றப்பட்டுள்ளது.

பின்னர் சிறுவனும் நலமுடன் இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.